விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை (ஜன. 18) முதல் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய அளவில் கரோனா தொற்று பரவியதையடுத்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. தற்போது கரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் புறநோயாளிகள் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.