பெங்களூரு

மாணவா்களின் பேருந்து பயண அட்டை பிப். 28 வரை செல்லுபடியாகும்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேருந்து பயண அட்டை பிப். 28 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

DIN

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேருந்து பயண அட்டை பிப். 28 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரி மாணவா்களின் நலன்கருதி 2019-20-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண பேருந்து பயண அட்டைகளின் செல்லுபடி காலம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் கரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு 2020-21 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி வகுப்புகள் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால், மாணவா்களின் நலனுக்காக கடந்த ஆண்டுக்கான பேருந்து பயண அட்டைகளின் செல்லுபடி காலம் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டித்து ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவா்களின் பேருந்து பயண அட்டையை பிப். 28-ஆம் தேதி பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT