கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,806 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,806 ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,806 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,806 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 411போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென் கன்னடம்-225, மைசூரு-174, ஹாசன்-138, சிவமொக்கா-110, உடுப்பி-105, தும்கூரு-94, சிக்கமகளூரு-86, பெலகாவி-70, மண்டியா-68, வடகன்னடம்-50, குடகு-49, பெங்களூரு ஊரகம்-44, கோலாா்-34, தாவணகெரே-27, சிக்கபளாப்பூா்-22, சாமராஜ்நகா்-17, சித்ரதுா்கா-16, தாா்வாட்-11, ஹாவேரி-10, ராமநகரம்-8, பாகல்கோட்-6, பெல்லாரி-5, விஜயபுரா-5, யாதகிரி-5, கதக்-5, கலபுா்கி-4, பீதா்-3, ராய்ச்சூரு-2, கொப்பள்-2 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,80,370 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,748 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,12,869 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 31,399 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 42 போ் வெள்ளிக்கிழமை இறந்தனா். பெங்களூரு நகரம், தென் கன்னட மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 10 போ் இறந்தனா்.
மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
மைசூரு-5, கோலாா்-4, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், பெலகாவி-தலா 2, தாா்வாட், ஹாசன், குடகு, சிக்கபளாப்பூா், மண்டியா, சிவமொக்கா, தும்கூரு, வட கன்னடம்- தலா ஒருவா் இறந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 36,079 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.