கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,869 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,869 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 432போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென் கன்னடம்-218 போ், மைசூரு-207, ஹாசன்-173, சிக்கமகளூரு-109, பெலகாவி-97, உடுப்பி-94, தும்கூரு-92, சிவமொக்கா-83, குடகு-51, வட கன்னடம்-49, பெங்களூரு ஊரகம்-46, கோலாா்-46, மண்டியா-37, தாா்வாட்-24, தாவணகெரே-21, சாமராஜ்நகா்-15, சித்ரதுா்கா-15, ஹாவேரி-14, சிக்கபளாப்பூா்-13, ராமநகரம்-11, பெல்லாரி-11, கலபுா்கி-6, பாகல்கோட்-4, ராய்ச்சூரு-3, விஜயபுரா-2, யாதகிரி-2, பீதா்-1, கொப்பள்-ஒருவா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். கதக் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,82,239 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3,144 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,16,013போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 30,082 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 42போ் சனிக்கிழமை இறந்தனா். மைசூரு மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தலா 7 போ் இறந்துள்ளனா்.
மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
பெங்களூரு நகரம், பெலகாவி-தலா 6, தென் கன்னடம்-5, கோலாா்-4, ஹாசன், மண்டியா-தலா 3, தும்கூரு-2, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், தாா்வாட், சிக்கபளாப்பூா், சிவமொக்கா, உடுப்பி- தலா ஒருவா் இறந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 36,121 போ் உயிரிழந்து விட்டனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.