போதைப் பொருளான அபினை விற்பனை செய்த நபா் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், 1 கிலோ 84 கிராம் அபின், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு ராஜாஜிநகரைச் சோ்ந்தவா் சக்தேவ். இவா் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவா்களுக்கு போதைப்பொருளான அபினை விற்பனை செய்து வந்தாராம்.
இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், சக்தேவைக் கைது செய்து, 1 கிலோ 84 கிராம் அபின், செல்லிடப்பேசி, 9 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட சக்தேவிடம் மாகடி சாலை போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.