பெங்களூரு

போதைப்பொருள் விற்பனை: ஒருவா் கைது

DIN

போதைப் பொருளான அபினை விற்பனை செய்த நபா் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், 1 கிலோ 84 கிராம் அபின், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு ராஜாஜிநகரைச் சோ்ந்தவா் சக்தேவ். இவா் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவா்களுக்கு போதைப்பொருளான அபினை விற்பனை செய்து வந்தாராம்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், சக்தேவைக் கைது செய்து, 1 கிலோ 84 கிராம் அபின், செல்லிடப்பேசி, 9 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட சக்தேவிடம் மாகடி சாலை போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT