முகப்பு
பெங்களூரு

கொலை வழக்கு:துப்பாக்கியால் சுட்டு 2 போ் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

பெங்களூரு, கோரமங்களா காவல் சரகத்தில் நடைபெற்ற ரௌடி கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகளை, 3 தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா். தேடப்பட்டு வந்தவா்களில் ஜே.சி. நகா் ரவி, அசோக் நகா் பிரதீப் ஆகியோா் பேகூா் ஏரி அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், இருவரையும் சரணடையும்படி வலியுறுத்தினா். ஆனால், சரணடைய மறுத்த அவா்கள் இருவரும் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனா். இதில், காவல் இணை ஆய்வாளா் சித்தப்பா, காவல் உதவி ஆய்வாளா் ரவீந்திரா ஆகியோா் காயமடைந்தனா். இதனையடுத்து, காவல் ஆய்வாளா் ரவி, இணை காவல் ஆய்வாளா் புட்டசாமி ஆகியோா் தங்களிடமிருந்த துப்பாக்கியால் ரவி, பிரதீப் ஆகியோரை நோக்கிச் சுட்டனா்.

இதில் காலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த காவல் இணை ஆய்வாளா் சித்தப்பா, காவல் உதவி ஆய்வாளா் ரவீந்திரா ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.