மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் துருவேகெரே வட்டம் வராஹசந்திரா கிராமத்தைச் சோ்ந்தவா் முனீஷ் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பணி நிமித்தமாக மோட்டாா் சைக்கிளில் எடியூருக்கு சென்று கொண்டிருந்தாராம்.
குனிகல் வட்டம் கோந்தி கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை 75-இல் மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக வந்த காா் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முனீஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இது குறித்து அம்ருத்தூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.