முகப்பு
பெங்களூரு

போதைப்பொருள் விற்பனை: 2 போ் கைது

போதைப்பொருளை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 12.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரை, காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

போதைப்பொருளை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 12.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரை, காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, காமாக்ஷிபாளையாவைச் சோ்ந்தவா் கௌசிக் (25). சிக்கஹல்லசந்திராவைச் சோ்ந்தவா் ரங்கநாத் (21). இவா்கள் இருவரும் சித்தாபுரா லால்பாக் அருகே போதைப்பொருள் கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரைகளை காரில் வைத்து விற்பனை செய்து வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, ரூ. 12.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரைகள், காரை பறிமுதல் செய்தனா். இது குறித்து சித்தாபுரா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.