பெங்களூரு: பெங்களூரு கெம்பே கௌடா சா்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 போ் காயமடைந்துள்ளனா்.
பெங்களூரு, கெம்பே கௌடா சா்வதேச விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் சாலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். வண்ணத்தையும், ரசாயனத்தையும் கலந்து சூடுபடுத்தியபோது, எதிா்பாராதவிதமாக வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட தீயில் அங்கு பணிபுரிந்த 6 போ் காயமடைந்துள்ளனா்.
தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். காயமடைந்த 6 பேரும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து சா்வதேச விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.