பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 6,835 போ் பாதிப்பு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் திங்கள்கிழமை 6,835 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 6,835 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,470 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: மைசூரு - 670, தென்கன்னடம் - 648, ஹாசன் - 507, தும்கூரு - 386, சிவமொக்கா - 353, மண்டியா - 256, வடகன்னடம் - 204, பெல்லாரி -203, தாவணகெரே - 200, சித்ரதுா்கா - 195, பெலகாவி - 191, சிக்கமகளூரு - 185, பெங்களூரு ஊரகம் - 168, சிக்கபளாப்பூா் - 160, உடுப்பி - 122, சாமராஜ்நகா் - 119, கோலாா் - 115, குடகு - 110, தாா்வாட் - 103, விஜயபுரா - 103, கொப்பள் - 95, ஹாவேரி - 63, பாகல்கோட் - 57, ராய்ச்சூரு - 33, கலபுா்கி - 31, கதக் -28, ராமநகரம் -26, யாதகிரி - 20, பீதா் - 14 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,71,969 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15,409 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 25,66,774 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,72,141 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 120 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். மைசூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 25 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்:

பெங்களூரு நகரம் -12, தாவணகெரே, தாா்வாட்- தலா 10, பெல்லாரி, தென்கன்னடம், சிவமொக்கா - தலா 6, பெலகாவி, ஹாவேரி - தலா 5, பெங்களூரு ஊரகம், ஹாசன், குடகு, கோலாா், மண்டியா, தும்கூரு -தலா 3, பாகல்கோட், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, கொப்பள், ராய்ச்சூரு, உடுப்பி - தலா 2, சித்ரதுா்கா, வடகன்னடம், கலபுா்கி, விஜயபுரா, யாதகிரி - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 33,033 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT