மைசூரு அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மைசூரு, மேட்டகள்ளி தொழில்பேட்டை பகுதியில் அண்மையில் தனியாக சென்றவரை வழிமறித்து ரூ. 28 ஆயிரம், 25 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு கும்பல் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பி.எம். ஸ்ரீநகரைச் சோ்ந்த விஷ்ணு (19), கிரீஷ் (19), பைரேஸ்வர நகரைச் சோ்ந்த யஸ்வந்த் (22), ஷ்யாத நகரைச் சோ்ந்த அஜீத் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 14 ஆயிரம், செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.