பெங்களூரு

சுற்றுலாப் பயணிகளால் கரோனா தொற்று அதிகரிப்பு: அமைச்சா் ஆனந்த் சிங்

DIN

சுற்றுலாப் பயணிகளால் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆனந்த் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு மட்டுமின்றி ஹொசபேட்டை, பெல்லாரி உள்ளிட்ட நகரங்களிலும் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே காரணம். ஹம்பி, ஹொசபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். மகாராஷ்டிரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகையால் கரோனா தொற்று கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது.

கரோனா தொற்றால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி வந்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியை போட்டுக் கொள்ள யாரும் தயக்கம் காட்டக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT