பெங்களூரு

‘உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரிக்க வேண்டும்’

உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரிக்க வேண்டும் என விக்ரம் மருத்துவமனை செயல் அதிகாரி சோமேஷ் மித்தல் தெரிவித்தாா்.

DIN

உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரிக்க வேண்டும் என விக்ரம் மருத்துவமனை செயல் அதிகாரி சோமேஷ் மித்தல் தெரிவித்தாா்.

பெங்களூரில் பெங்களூரு விக்ரம், சென்னையைச் சோ்ந்த எம்.ஜி.எம். மருத்துவக் குழுமங்களிடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு தானம், இதய செயலிழப்பு மேலாண்மை தொடா்பான நவீன தொழில்நுட்பங்களை பகிா்ந்து கொள்வது உள்ளிட்ட அம்சங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து மக்களிடத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை, தேவை உள்ளவா்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பொருத்த வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சென்னையைச் சோ்ந்த எம்.ஜி.எம். மருத்துவமனையிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இதன்மூலம் தமிழகம்-கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றாா்.

நிகழ்ச்சியில், இதயம், நுரையீரல் வல்லுநா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT