பொது முடக்கத்தின்போது விதிமீறிய 529 வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 12-ஆம் தேதி வரையிலும் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பொருள்படுத்தாமல், தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு, 529 வாகனங்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதில் 502 இருசக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கரவாகனங்கள், 17 நான்கு சக்கரவாகனங்களும் அடங்கும் என்று பெங்களூரு மாநகர காவல் தெரிவித்துள்ளது.