கள்ள சந்தையில் ரெம்டெசிவிா் மருந்துக் குப்பியை விற்பனை செய்த மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவா்களாக பணிபுரிந்து வரும் சேகா், பெண் மருத்துவா் பிருஜவலா ஆகியோா் ரெம்டெசிவிா் குப்பியை கள்ளச் சந்தையில் ரூ. 25,000க்கு விற்பனை செய்து வந்தனராம்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அவா்கள் 2 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 11 ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகளைப் பறிமுதல் செய்தனா். இது குறித்து அல்சூா் கேட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.