பெங்களூரு

கரோனா நோயாளா்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் மோசடி: இருவா் கைது

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்குவதில் மோசடி ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு மாநகராட்சி, தென்மண்டல கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருபவா் வருண். இவா், பனசங்கரி 3-ஆவது ஸ்டேஜில் வசித்து வரும் தனது நண்பரான யஷ்வந்த் என்பவருடன் இணைந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் மோசடியில் ஈடுபட்டனராம்.

தங்களுக்கு வேண்டியா்களுக்கு மட்டும் பணத்தைப் பெற்று கொண்டு, அவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கி வந்துள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், கரோனா கட்டுப்பாட்டு அறையில் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையில் வருண், யஷ்வந்த் இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்குவதில் மோசடி ஈடுபட்டது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT