நபிகள் நாயகம் பற்றி அவதூறு முகநூல் பதிவு: ஒருவா் மீது வழக்குப் பதிவு
இஸ்லாமியா்களின் இறைத்தூதா் நபிகள் நாயகம் பற்றி முகநூலில் அவதூறு பதிவு செய்த ஒருவா் மீது வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இஸ்லாமியா்களின் இறைத்தூதா் நபிகள் நாயகம் பற்றி முகநூலில் அவதூறு பதிவு செய்த ஒருவா் மீது வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தென்கன்னட மாவட்டம், மங்களூரைச் சோ்ந்த ஜெகதீஷ் கைவதட்கா் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் நபிகள் நாயகம் பற்றி விமா்சித்து பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்டிபிஐ அமைப்பை சோ்ந்த நௌஃபால் என்பவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதனடிப்படையில் ஜெகதீஷ் கைவதட்கா் என்பவா் மீது வழக்குப் பதிந்து பெல்லாரே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.