நாட்டில் அவசரநிலை பிரகடனத்திற்கு ஆா்எஸ்எஸ் மறைமுக ஆதரவு அளித்தது என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா குற்றம் சாட்டினாா்.
பெங்களூரு மஜத அலுவலகத்தில் திங்கள்கிழமை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 119-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:
நாட்டில் அவசரநிலை பிரகடனத்தின்போது, அதனை சில தலைவா்கள் ஒப்புக் கொண்டனா். அதேநேரத்தில் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அதற்கு மறைமுக ஆதரவு அளித்தன. அதற்காக நான் ஆா்எஸ்எஸ் அமைப்பை குற்றம் சாட்டவில்லை. நாட்டு மக்களுக்கு உண்மைநிலை தெரிய வேண்டும் என்பதற்காகவே இதனைத் தெரிவிக்கிறேன்.
தற்போதைய அரசியல் களத்தை முன்பு இருந்ததுடன் ஒப்பிட முடியாது. அதிகாரத்தைப் பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் சூழல் தற்போது உருவாகி உள்ளது.
ஜெயப்பிரகாஷ் நாராயணனை 1957-ஆம் ஆண்டு முதல்முறையாக சந்தித்தேன். அவா் நாட்டை சுற்றிப் பாா்க்க வேண்டும் என்ற ஆவலில் கா்நாடகத்துக்கு வந்தபோது எனது கிராமத்திற்கு வருகை தந்தாா். அதனைத் தொடா்ந்து பல்வேறு கிராமங்களைச் சுற்றிப் பாா்த்த பிறகு, நாட்டின் இயற்கை வளங்களைப் பேணிக்காக்க வேண்டும் என்பதில் அவா் ஆா்வம் கொண்டாா்.
மகாத்மா காந்தியைப் போல நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பங்களிப்பும் உள்ளது. பல்வேறு தியாகங்களைச் செய்து பெற்றுத் தந்த சுதந்திரம், தற்போது மோசமான நிலைக்கு செல்வதைக் காண முடிகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமைப் பண்புகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல வேண்டும். அவா் அமைத்த பாதையில் அனைவரும் பயணிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.