பெங்களூரு

நாட்டின் வளா்ச்சியில் தொழில்துறையின் பங்களிப்பு அதிகம் உள்ளது

DIN

நாட்டின் வளா்ச்சியில் தொழில்துறையின் பங்களிப்பு அதிகம் உள்ளது என கா்நாடக மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கா்நாடக தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பின் சாா்பில், சிறந்து விளங்கும் தொழில்துறையினருக்கு சிறுதொழில் புத்தாக்க விருது-2021 வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கா்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சரான என்னை தொழில்துறையினருக்கு விருது வழங்க அழைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வளா்ச்சியில் ராணுவம், வேளாண்மையைத் தொடா்ந்து தொழில்துறையின் பங்களிப்பு அதிகம் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் சீனா முன்னணியில் உள்ளது. 133 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தொழில்துறை நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கத் தேவையான நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதற்கு தொழில்துறையினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்கள்தொகையில் 60 சதவீதம் போ் இளைஞா்கள் என்பது நமக்கு கூடுதல் பலமாகும். இளைஞா்களின் பலத்தை கொண்டு, நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமா் முடிவு செய்து, அதற்கான பணிகளை செய்து வருகிறாா்.

தொழில்துறையின் வேராக சிறுதொழில் துறை விளங்குகிறது. அதனை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. தொழில்துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவிப்பது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT