பெங்களூரு

4 குழந்தைகளுடன் முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை

DIN

கருப்புப் பூஞ்சை நோயால் மனைவியை இழந்த வேதனையில், 4 குழந்தைகளுடன் முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் கோபால் ஹடிமணி (49). கடந்த ஜூலை மாதத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி, பின்னா் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாா்.

இதனால் மிகவும் வேதனை அடைந்திருந்த கோபால் ஹடிமணி, தனது 4 குழந்தைகளான சௌம்யா (19), ஸ்வேதா (16), சாக்ஷி (11), ஸ்ரீஜன் ஹடிமணி (8) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

சனிக்கிழமை காலை யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து பாா்த்த போது 5 பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT