முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்

அஸ்ஸாமின் தற்போதைய முதல்வர் நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 4:10 PM
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 3:42 PM

அஸ்ஸாமின் தற்போதைய முதல்வர் நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அஸ்ஸாமின் தற்போதைய முதல்வர் நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்தவர். சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்ப முடியாது. தனது அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் துன்புறுத்துவதற்காக அவர் மாநில அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

எழுப்பப்படும் கேள்விகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை, அதிகாரத்திற்கான பொறுப்புடைமை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவையே நமது அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையாகும். காங்கிரஸ் கட்சி பவன் கேராவிற்கு உறுதுணையாக நிற்கிறது. எதற்கும் அஞ்சி பின்வாங்க மாட்டோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்களான பவன் கேரா, கௌரவ் கோகோய் ஆகியோர், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா, இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பதாக குற்றச்ஞ்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பவன் கேராவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

summary

Congress MP Rahul Gandhi on Monday extended support to party spokesperson Pawan Khera, following the Assam Police action linked to allegations made by Khera against Assam Chief Minister Himanta Biswa Sarma’s wife, Riniki Bhuyan Sharma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.