முகப்பு
தமிழ்நாடு

ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்? காங்கிரஸ் எம்.பி. விளக்கம்

அரசுமுறைப் பயணம் காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என திலக் எம்.பி. தகவல்

விஜய் | ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

அரசுமுறைப் பயணம் காரணமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் ச. ஜோசப் விஜய் சந்திக்கவில்லை என திலக் எம்.பி. கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் குறித்து செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. திலக் பேசியதாவது, "தில்லி பயணத்தை முழுமையாக அரசுமுறைப் பயணமாக வைத்திருக்க முதல்வர் விஜய் முடிவு செய்திருக்கலாம். அடுத்த முறை மீண்டும் ஜூன் 11-ல் விஜய் தில்லி வருகிறார். அப்போது, சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் கண்டிப்பாக விஜய் சந்திப்பார்.

மேலும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் இப்போது இங்கு (தில்லி) வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஜார்க்கண்டின் மாநிலங்களவை எம்.பி.க்கள் தொடர்பான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முதல்வர் விஜய்யுடன் பேச முடியாத காரணமாகவும் இருக்கலாம்.

மேலும், ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிலைத் திறப்பு நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

summary

Why Did CM Vijay Not Meet Congress Leader Rahul Gandhi?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.