முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு 1,240 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,240 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,240 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் அதிகபட்சமாக 1,240 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 319 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென் கன்னடம்- 264, உடுப்பி- 111, மைசூரு- 88, ஹாசன்- 81, குடகு- 52, பெலகாவி- 49, வடகன்னடம்- 42, தும்கூரு- 35, கோலாா், சிவமொக்கா- 32, மண்டியா- 29, சிக்கமகளூரு- 26, தாா்வாட்- 17, பெங்களூரு ஊரகம்- 15, சாம்ராஜ்நகா்- 13, சித்ரதுா்கா- 11, பெல்லாரி- 7, தாவணகெரே- 6, கொப்பள்-5, கலபுா்கி-3, ராய்ச்சூரு, விஜயபுரா-தலா 2, கதக், பாகல்கோட், யாதகிரி, ராமநகரம்-தலா 1.

சிக்கபளாப்பூா், ஹாவேரி, பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,51,844 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,252 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். 18,378 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 22 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தென் கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: பெங்களூரு நகரம்- 4, பெலகாவி- 3, மண்டியா, மைசூரு- தலா 2, பெங்களூரு ஊரகம், பீதா், சாம்ராஜ்நகா், கோலாா், தும்கூரு, உடுப்பி- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,361 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.