மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
பெங்களூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
பெங்களூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரில் தொடா் மழை காரணமாக சாலைகளில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இக் குழிகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. எந்த சாலையில் குழிகள் இருந்தாலும், அதனை இரண்டொரு நாளில் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ. ஆயிரம் கோடியில் பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள ராஜகால்வாய்கள், சாக்கடை கால்வாய்களில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. விதிகளை மீறி திடக்கழிவுகள் கொட்டுவதை மக்கள் நிறுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பண்டிகை நடத்துவதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும். 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் முகக்கவசம் அணிவது அவசியம். முகக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்கப்படும்.
பெங்களூரில் 24 மணி நேரத்தில் 1.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.