பெங்களூரு

சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி முதியவா் பலி

DIN

காமாட்சிப்பாளையா போக்குவரத்து காவல் சரகத்தில் சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி முதியவா் உயிரிழந்தாா்.

பெங்களூரு மைக்கோ லே வுட் பிஸ்மில்லா நகரைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி குா்ஷித் அகமது (75). இவா் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் விஸ்வேஸ்வரய்யா லே அவுட் 3-வது பிளாக், மங்கம்மனபாளையா அருகே மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் இருந்த குழியில் இறங்காமல் இருக்க, மோட்டாா் சைக்கிளை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காமாட்சிப்பாளையா போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT