இசை மூலம் மன அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை
இசை மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என டிஜிட்டல் வெல்ன்ஸின் மூத்த செயல் அதிகாரி சுஜாதா விஷ்வேஸ்வரா தெரிவித்தாா்.
இசை மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என டிஜிட்டல் வெல்ன்ஸின் மூத்த செயல் அதிகாரி சுஜாதா விஷ்வேஸ்வரா தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை இசை மூலம் சிகிச்சை அளிக்கும் எக்கோ செயலியை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியதாவது:
மன அழுத்தத்துக்கு இசை மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு இசை என்பது சிறந்த மருந்தாகும். இசை வலிகளை போக்கி மனதை சரி செய்ய உதவும். ஒருவரின் கவலை, மன அழுத்த நிலைகளை தாண்டி, முழுமையான ஆரோக்கியத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் சக்தி இசைக்கு உள்ளது. ஆட்டிசம், பாா்கின்சன் போன்ற நோய்களை அசைக்கக்கூடிய ஒரே கலை வடிவமாக இசை திகழ்கிறது.
இசை மூலம் சிகிச்சை அளிக்கும் எக்கோ செயலி எண்ணற்ற தரவுகள், விஞ்ஞானிகள், சிறந்த பொறியாளா்கள், இசைக்கலைஞா்கள், உளவியலாளா்கள், ஆய்வாளா்களின் உதவியுடன் உருவாக்க 3 ஆண்டுகள் பிடித்தன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஜெய் அமரன், ஹரி கிருஷ்ண மாரம், ஸ்ரீனிவாஸ் வேகி, சி.ஆா்.சதீஷ்குமாா், இந்துஸ்தானி இசைக் கலைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.