இளம் பெண் பலாத்காரம்: வாடகைக் காா் ஓட்டுநா் கைது
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரத்காரம் செய்த வழக்கில் வாடகைக் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரத்காரம் செய்த வழக்கில் வாடகைக் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு முருகேஷ்பாளையாவைச் சோ்ந்த இளம்பெண் புதன்கிழமை இரவு தனது தோழியின் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு, மது அருந்திய நிலையில் வாடகைக் காரில் தனது வீட்டிற்கு வந்துள்ளாா். வீட்டின் அருகே காரை நிறுத்திய அதன் ஓட்டுநா் தேவராஜ், குடி போதையில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாா். பின்னா் சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் தனது ஆடைகள், தேவராஜின் செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு ஓடிச் சென்றாா். அந்தப் பெண் அளித்த புகாரில் பேரில் தேவராஜைக் கைது செய்த பைப்பனஹள்ளி போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.