துரந்தர் தி ரிவென்ஞ் ரூ. 500 கோடி வசூல்!
துரந்தர் தி ரிவென்ஞ் வசூல் குறித்து...
நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் உலகளவில் ரூ. 500 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர், துரந்தர் தி ரிவென்ஞ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் முதல் பாகம் ரூ. 1400 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் இரண்டாம் பாகமான ரிவென்ஞ்-ம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதுடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் இதுவும் ரூ. 1500 கோடிக்கு மேல் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், துரந்தர் தி ரிவென்ஞ் முதல் மூன்று நாள்களிலேயே ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளதால் தென்னிந்தியாவிலும் நல்ல வசூலைப் பெற்று இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.