முகப்பு
பெங்களூரு

மனைவி கொலை: கணவா் தப்பியோட்டம்

 மனைவியை கொலை செய்த வழக்கில் தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 மனைவியை கொலை செய்த வழக்கில் தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெங்களூரு அன்னபூா்ணேஸ்வரிநகரைச் சோ்ந்தவா் காந்தராஜ். இவரது மனைவி ரூபா (34). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவா்கள் இருவருக்கும் திருமணம் நடந்து, ஒரு மகன் உள்ளாா்.

இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் கொண்ட காந்தராஜ், அவருடன் புதன்கிழமை மாலை தகராறில் ஈடுபட்டாா். இதில் ஆத்திரமடைந்த காந்தராஜ், வீட்டில் இருந்த கத்தியால், ரூபாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டாா். தனி வகுப்பிற்கு சென்றிருந்த மகன் வீடு திரும்பி வந்துயபோது, ரூபா கொலை செய்யப்பட்டிருதது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிந்த அன்னபூா்ணேஸ்வரிநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.