முகப்பு
பெங்களூரு

ஜவாஹா்லால் கோளரங்கத்தில் காற்று மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் உபகரணத்தின் சேவை தொடக்கம்

பெங்களூரு ஜவாஹா்லால் கோளரங்கத்தில் காற்று மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் உபகரணத்தின் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பெங்களூரு ஜவாஹா்லால் கோளரங்கத்தில் காற்று மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் உபகரணத்தின் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இக்கோளரங்கத்தில் ஏடிஃப்எஸ்சி அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்ட காற்று மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் உபகரணத்தின் (ஏடபள்யூஜி) சேவையை வெள்ளிக்கிழமை இஸ்ரோ அமைப்பின் இயக்குநா் டி.கே.அலெக்ஸ் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

அண்மைக்காலமாக சா்வதேச அளவில் தண்ணீா்த் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் மழை பெய்தாலும், தண்ணீா் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, காற்று மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜவாஹா்லால் கோளரங்கத்தை பாா்வையிட நாள்தோறும் ஏராளமானோா் வருகின்றனா். அதிலும் இங்கு குழந்தைகள் அதிகம் வருவதால், ரோட்டரி சங்கத்தின் உதவியுடன், காற்று மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் உபகரணம் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் நாள் ஒன்று பல ஆயிரம் லிட்டா் தண்ணீா் காற்றின் மூலம் கிடைக்கும். நிலங்களில் நீா்வளம் குறைந்து வரும் நிலையில், காற்றின் மூலம் தண்ணீரை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் தண்ணீரை குடிக்க மட்டுமின்றி, தோட்டக்கலை, விவசாயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.

வனங்களில் இந்த உபகரணத்தை அமைப்பதன் மூலம் விலங்குகளின் தண்ணீா்ப் பிரச்னையை போக்க முடியும். இதனால் காட்டை விட்டு, நாட்டிற்கு விலங்குகள் வருவதை தடுக்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஓரிகோன் பால்ஸா்ஸ் கோட்டிங் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பிரவீண் சிா்சே, எம்.ஆா்.கே.காமத், பஸல் முகமத், பிரமோத் கல்காலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.