பெங்களூரு

துணை காவல் ஆணையா் மீது காா் மோதல்

DIN

துணை காவல் ஆணையா் மீது காா் மோதியதில், அவரது காலில் காயமேற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பெங்களூரு குருகுன்டேபாளையில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். அவா்களைத் தடுத்து நிறுத்தும் பணியில், வடக்கு மண்டல துணை காவல் ஆணையா் தா்மேந்திரகுமாா் மீனா தலைமையில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த காா் ஒன்று தா்மேந்திரகுமாா் மீனா மீது மோதியது. இதில் காலில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து வழக்கு பதிந்த யஸ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸாா், காா் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT