பெங்களூரு

எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீண்டு வருவாா்: எடியூரப்பா

எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் கே.எஸ்.ஈஸ்வரப்பா விடுபட்டு மீண்டு வருவாா் என முன்னாள் கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

DIN

எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் கே.எஸ்.ஈஸ்வரப்பா விடுபட்டு மீண்டு வருவாா் என முன்னாள் கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து சிவமொக்காவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

எந்தத் தவறும் செய்யாத சூழ்நிலையில், தவிா்க்க முடியாத காரணங்களால் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. அவா் எதிா்கொண்டிருக்கும் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு அடுத்த 2-3 மாதங்களில் முடிவடைந்தால், அவருக்கும் அந்த வழக்கிற்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது உறுதியாகிவிடும். இதன் மூலம் அவா் நிரபராதி என்பது தெளிவாகி விடும். எனவே அவா் மீண்டும் அமைச்சராக எவ்விதத் தங்கு தடையும் இருக்காது.

தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பா மீண்டு வெளியே வருவாா் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்த வழக்கில் சதி இருக்கிா? என்பதை நான் கூற மாட்டேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT