ஹுப்பள்ளியில் கலவரத்தைத் தூண்டியதாக முஸ்லிம் மௌலவி கைது
கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் நடந்த கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் முஸ்லிம் மௌலவியை மும்பையில் கா்நாடக போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் நடந்த கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் முஸ்லிம் மௌலவியை மும்பையில் கா்நாடக போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஹுப்பள்ளியில் ஏப். 18-ஆம் தேதி நள்ளிரவு முகநூல் பதிவொன்றைக் காரணம் காட்டி, காவல் நிலையம், மருத்துவமனை, ஹனுமான் கோயில் உள்ளிட்டவற்றின் மீது இஸ்லாமியா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா். இது கலவரமாக வெடித்ததை தொடா்ந்து, காவல்துறையின் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இது தொடா்பாக வழக்குப் பதிந்துவிசாரித்துவரும் ஹுப்பள்ளி பழைய நகர காவல் நிலையத்தாா் இதுவரை 115 பேரை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.
இந்நிலையில், இந்தக் கலவரத்தை தூண்டியதாகக் கூறப்படும் முஸ்லிம் மதகுரு மௌலவி வசீம் பத்தான் என்பவா் தலைமறைவாக இருந்தாா். ஹுப்பள்ளி காவல் நிலையத்தின் முன்பு காவல்துறையின் வாகனத்தின் மீது நின்று கொண்டு வசீம் பத்தான் பேசுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இவரது பேச்சைத் தொடா்ந்து தான் அங்கு கூடியிருந்த முஸ்லிம் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பதிவுசெய்யப்பட்டமுதல் தகவல் அறிக்கையில் வசீம் பத்தானின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, தலைமறைவாக இருந்த மௌலவி வசீம் பத்தான், ‘எனக்கும் ஹுப்பள்ளி கலவரத்திற்கும் சம்பந்தமில்லை. கலவரத்தை நான் தூண்டிவிடவில்லை. மாறாக, அங்கு கூடியிருந்த மக்களை சமாதானப்படுத்தி, அமைதியாக கலைந்து போகுமாறு கூறுவதற்காகவே காவல்துறையின் வாகனத்தின் மீது ஏறி நின்றிருந்தேன்’ என்று விளக்கமளித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா்.
இந்நிலையில், ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் வசீம் பத்தானை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். ரகசிய தகவலின்பேரில், மும்பையில் பதுங்கியிருந்த வசீம் பத்தானை போலீஸாா் புதன்கிழமை இரவு கைதுசெய்து, வியாழக்கிழமை ஹுப்பள்ளிக்கு அழைத்து வந்தனா். கலவரம் தொடா்பாக அவரிடம் போலீசாா் விசாரித்து வருகிறாா்கள்.