முகப்பு
பெங்களூரு

சட்டப் பேரவைக் கூட்டத்தொடா்: விதான சௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, பிப்.14-ஆம் தேதி முதல் விதான சௌதாவில் 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, பிப்.14-ஆம் தேதி முதல் விதான சௌதாவில் 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள சட்டப் பேரவையில் பிப்.14-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிப்.14 முதல் 25-ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.