முகப்பு
செய்திகள்

ஜீவா - ராஜேஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் ஜீவாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...

Updated On : 21 மார்ச், 2026 at 3:36 PM
பகிர்:

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்துள்ள இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.