சூர்யா - 47 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சூர்யா - 47 படப்பிடிப்பு நிறைவு...
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா - 47 ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சூர்யாவே தன் ழகரம் தயாரிப்பு மூலம் தயாரித்த இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆவேசம் பாணியில் இது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Filming for actor Suriya's 47th movie has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.