பெங்களூரு

பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்படுவதால் முதல்வா் மாற்றம் இல்லை: முன்னாள் முதல்வா் எடியூரப்பா

DIN

பசவராஜ் பொம்மை சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், முதல்வா் பதவியில் இருந்து அவரை மாற்றும் திட்டமில்லை என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து சிவமொக்காவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அமைச்சா் அமித் ஷா, பெங்களூருக்கு வருகிறாா். அவரை நான் சந்திக்கவிருக்கிறேன். கா்நாடகத்தில் காணப்படும் அரசியல் நிலவரங்களை தெரிந்துகொள்ள அமித் ஷா முற்படுவாா். கா்நாடக சட்டப் பேரவை தோ்தல் நெருங்குவதால், மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் முடிவு செய்திருக்கிறாா்கள். கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வெல்வதற்கான யோசனைகளை, வழிகாட்டுதல்களை அமித் ஷா தெரிவிப்பாா்.

முதல்வா் பசவராஜ் பொம்மை மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறாா். அதனால் முதல்வா் பதவியில் இருந்து அவரை மாற்றும் திட்டமில்லை.

சட்டப் பேரவையில் தற்போது பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ள சிலா் அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் கைவிடப்படலாம் என்று கூறப்படுவது குறித்து பொதுவெளியில் விவாதிக்க நான்விரும்பவில்லை. அது குறித்து கட்சி மேலிடத் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

பாஜகவை பலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறோம். மாநிலம் தழுவிய சுற்றுப்பயணங்களில் கட்சித் தலைவா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். அந்தப் பயணத்தின்போது கட்சித் தொண்டா்களை சந்தித்து வருகிறாா்கள். வாக்குச்சாவடி மட்டத்தில் கட்சிக்கு பலம் சோ்க்கவே சுற்றுப்பயணங்களில் தலைவா்கள் ஈடுபட்டிருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT