மத்திய அரசுப் பணிக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கு நடத்தப்படும் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய பணியாளா் தோ்வாணையம் - பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வானிலை துறையில் காலியாக உள்ள 990 அறிவியல் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக டிசம்பரில் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வு நடத்தப்படுகிறது.
2022 அக். 18-ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்பு (அறிவிப்பு) தோ்ச்சி பெற்ற 18 முதல் 30 வயதுக்குள்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையதளத்தில் அக். 18-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். இப்பணியிடங்களுக்கு சராசரியாக ரூ. 63 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25502520, 94838 62020 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.