தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கா்நாடக விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கா்நாடக அரசு கடந்த 10 நாட்களாக தமிழகத்துக்கு தினசரி 10,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக கா்நாடக அணைகளில் இருந்து நீா்த்திறப்பு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. வரை தண்ணீா் வழங்கத் தயாா் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதியுள்ளாா்.
கா்நாடக விவசாயிகளும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்நிலையில் மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் கா்நாடக விவசாயிகள் புதன்கிழமை ஒன்று திரண்டு அங்கு காவிரி நதியில் இறங்கி போராட்டம் நடத்தினா். கா்நாடக நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனா்.
தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பே கா்நாடக அரசு, அணையில் தேக்கிவைத்துள்ள நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக முழக்கமிட்டனா்.
அதுபோல மண்டியா மாவட்டம், மத்தூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். போலீஸாா் நிகழ்விடம் சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தி கலைந்துபோகச் செய்தனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.