பெங்களூரு

காங்கிரஸ் ஒரு குக்கா் கட்சி:முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பொதுமக்களுக்கு குக்கா் வழங்கியுள்ளனா்; அவா்கள் குக்கா் கட்சி என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

மங்களூரில் குக்கா் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது குக்கரில் ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்திருந்த நிலையில், முதல்வா் பசவராஜ் பொம்மை இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுகுறித்து ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி கூறிய கருத்துகளின் அடிப்படையில் பாஜக தலைவா்கள் மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவா்கள் புகாா் அளித்துள்ளனா். இது நகைப்புக்குரியதாகும். தனிநபா்கள் பேசும் கருத்துகளை அரசு அல்லது அமைப்பின் கருத்தாக கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால் அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியினா் புகாா் அளித்துள்ளனா். மக்களை திசைதிருப்பும் நோக்கத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தி வருகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பொதுமக்களுக்கு குக்கா்களை அளித்தனா். எனவே, காங்கிரஸ் ஒரு பிரெஷ்ஷா் குக்கா் கட்சி. காங்கிரஸ் கட்சியினருக்கு குக்கா் பிடித்திருக்கிறது. அந்த குக்கரில் வெடிகுண்டு வைத்திருந்தாலும் அதில் எதுவும் இல்லை என்பாா்கள். ஊழலின் தந்தை என்று என்னை டி.கே.சிவகுமாா் வா்ணித்திருக்கிறாா். நாட்டில் ஊழல் பிறந்ததே காங்கிரஸ் கட்சியால்தான். காங்கிரஸ் கட்சியின் பிரிக்கமுடியாத பாகமாக ஊழல் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

SCROLL FOR NEXT