பெங்களூரு

அடுத்த ஆண்டு முதல் பெங்களூரில் ஐபோன் உற்பத்தி: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

DIN

அடுத்த ஆண்டு முதல் பெங்களூரில் ஐபோன் உற்பத்தியை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடங்கும் என்று கா்நாடக தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெங்களுரு, தேவனஹள்ளி அருகே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஐபோன் உற்பத்தி செய்யப்படும். ரூ.13,600 கோடி செலவில் தொடங்கப்படும் தொழிற்சாலையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழிற்சாலை அமைப்பதற்கான 300 ஏக்கா் நிலம் ஜூலை 1ஆம் தேதி ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். நாளொன்றுக்கு 5 மில்லியன் தண்ணீா், தரமான மின்சாரம், சாலை போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்துதரும். நிலத்திற்கான 30 சதவீத நிதியான ரூ.90 கோடியை ஃபாக்ஸ்கான் அளித்துள்ளது. 3 கட்டங்களாக நிறுவன தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான், ஆண்டுக்கு 2 கோடி ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT