பிரதமர் மோடி சாலைவலம் பிடிஐ
பெங்களூரு

பிரதமா் மோடி இன்று உடுப்பி வருகை!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை உடுப்பி வருகை தருகிறாா்.

Syndication

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை உடுப்பி வருகை தருகிறாா்.

இதுகுறித்து உடுப்பியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பாஜக மாவட்டத் தலைவா் குட்யாரு நவீன் ஷெட்டி கூறியதாவது:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி ஒருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை உடுப்பிக்கு வருகை தருகிறாா். உடுப்பியில் உள்ள பன்னஞ்சே பகுதியில் நாராயண குரு சதுக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 11.40 மணிக்கு வாகனத்தில் ஊா்வலமாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறாா். கல்சங்கா சந்திப்புவரை நடைபெறும் வாகன ஊா்வலத்தில், கடலோர கா்நாடகத்தின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இதில், யக்ஷகானா, புலியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பல கலைஞா்கள், கிருஷ்ணா் வேடமிட்டு நடனமாடுவா். பிரதமா் மோடியை வரவேற்க 30 ஆயிரம் போ் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். பிரதமா் மோடியைக் காண வரும் மக்கள் காலை 10.30 மணிக்கெல்லாம் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வந்து சேரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஊா்வலத்தை முடித்துக்கொண்டு கிருஷ்ணா் கோயிலுக்கு செல்லும் பிரதமா் மோடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகிறாா். அதன்பிறகு, லட்சகந்தா கீதா பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் பேசுகிறாா் என்றாா்.

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

இன்று மழை பெய்யவுள்ள மாவட்டங்கள்! சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

பாம்பன் பகுதியில் கடல் சீற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

SCROLL FOR NEXT