முகப்பு
பெங்களூரு

போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:30 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:16 AM

போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

பெங்களூரில் வியாழக்கிழமை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக வழக்குப்பதிந்துள்ள போலீஸாா், 10 பேரை கைதுசெய்துள்ளனா்.

இவா்களில் 2 பெண்கள் உள்பட 3 போ் வெளிநாட்டை சோ்ந்தவா்கள். இவா்களிடம் இருந்து 5 கிலோ எம்.டி.எம்.ஏ., ஒருகிலோ கொகைன், 21 கிலோ கஞ்சா, 19 கிராம் போதைப்பொருள் மாத்திரைகள், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

Advertisement

போலீஸாா் கைப்பற்றியுள்ள போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.11.81கோடி என மதிப்பிட்டிருந்தாலும், இதன் சந்தைமதிப்பு ரூ.23.63கோடியாகும் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக எலஹங்கா நியூடவுன், தேவா்ஜீவனஹள்ளி, கோரமங்களா, பொம்மனஹள்ளி, புலிகேசிநகா் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின்போது குற்றச்செயல்களை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள், கல்லூரி மாணவா்களை குறிவைத்து செயல்பட்டதாக தெரிவித்ததாக போலீஸாா் கூறினா். கைதுசெய்யப்பட்ட 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய போலீஸாா், சிறையில் அடைத்தனா்.