மொபெட்டில் சென்றவர் பஸ் மோதி சாவு
கள்ளக்குறிச்சி, ஜன. 8: விருகாவூர் அருகே தந்தையின் கல்லறைக்கு சென்று தூய்மை செய்து விட்டு மொபெட்டில் வீட்டுக்கு சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் சனிக்கிழமை அதே இடத்தில் ராஜதுரை (36) இறந்தார
கள்ளக்குறிச்சி, ஜன. 8: விருகாவூர் அருகே தந்தையின் கல்லறைக்கு சென்று தூய்மை செய்து விட்டு மொபெட்டில் வீட்டுக்கு சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் சனிக்கிழமை அதே இடத்தில் ராஜதுரை (36) இறந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணுவின் மகன் ராஜதுரை. இவர் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
தந்தையின் கல்லறைக்கு சென்று தூய்மைப்படுத்தி விட்டு மொபெட்டில் ராஜதுரை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து அடரி வழியாக விருத்தாசலம் சென்ற தனியார் பஸ் மோதியதில் அதே இடத்தில் ராஜதுரை இறந்தார்.
இது குறித்து வரஞ்சரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தனியார் பஸ் ஓட்டுனர் விருகாவூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் நடராஜனை (46) கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.