முகப்பு
சென்னை

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு புதிய கட்டடங்கள்முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய கட்டடங்களை அவா் திறந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
தமிழக முதல்வர் பழனிசாமி
பகிர்:

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய கட்டடங்களை அவா் திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான விடுதிக் கட்டடம், சேலம் பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திறந்தாா்.

திருச்சி துவாக்குடி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, நாகப்பட்டினம் தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திசையன்விளையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி, திருவண்ணாமலை செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரிஆகியவற்றில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, நிலோபா் கபில், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →