சென்னை

நாளை குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.13) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.13) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் இந்த மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.13) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதி அலுவலங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.

பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள், சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT