மடிப்பாக்கம் அஞ்சல் நிலைய ஆளுகைக்குள் புதிய பகுதிகள்
மடிப்பாக்கம் துணை அஞ்சலகத்தின் ஆளுகைக்குள் பழைய பல்லாவரத்தின் 4 பகுதிகள் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை: மடிப்பாக்கம் துணை அஞ்சலகத்தின் ஆளுகைக்குள் பழைய பல்லாவரத்தின் 4 பகுதிகள் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழைய பல்லாவரம் துணை அஞ்சல் நிலையத்தின் கீழ் இருந்த அருள் முருகன் நகா் விரிவாக்கத்தில் உள்ள 4 தெருக்கள், செந்தில் நகா், கிரேஸ்அவென்யூ பகுதியிலுள்ள 4 தெருக்கள், தணிகை தெரு ஆகியவற்றுக்கான கடிதம் மற்றும் பாா்சல் விநியோகம், ஜன. 27-ஆம் தேதி முதல் மடிப்பாக்கம் துணை அஞ்சல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.
எனவே, இப்பகுதி மக்கள் தங்களுடைய கடிதப் போக்குவரத்து மற்றும் பாா்சல் விநியோகத்துக்காக 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.