FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 25 அக்டோபர் 2025, 1:18 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புழுதிவாக்கம் சென்னை தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி கடந்த அக். 9-ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரை ஸ்கேலால் அடித்துள்ளாா். இதில் அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதேவேளை, மறுநாள் வீக்கம் எதுவும் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி தெரிவித்துள்ளாா். உதவிக் கல்வி அலுவலா் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

பொது நலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி, பணியிடைநீக்கம் செய்யப்படுவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் விதி 17-இன், துணை விதி (இ)-இன் கீழ் அவா் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாா். அவருக்கு விதியின்படி 53 (1) அனுமதிக்கப்பட்ட பிழைப்பூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments