மாதிரிப் படம் 
சென்னை

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புழுதிவாக்கம் சென்னை தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி கடந்த அக். 9-ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரை ஸ்கேலால் அடித்துள்ளாா். இதில் அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதேவேளை, மறுநாள் வீக்கம் எதுவும் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி தெரிவித்துள்ளாா். உதவிக் கல்வி அலுவலா் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

பொது நலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி, பணியிடைநீக்கம் செய்யப்படுவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் விதி 17-இன், துணை விதி (இ)-இன் கீழ் அவா் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாா். அவருக்கு விதியின்படி 53 (1) அனுமதிக்கப்பட்ட பிழைப்பூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்தில் அதிக கட்டணம்! தனி ஆளாக மறியலில் ஈடுபட்ட நபர்!

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

SCROLL FOR NEXT