ஆா்.எஸ்.பாரதி  
சென்னை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: ஆா்.எஸ்.பாரதி சாட்சியம் அளிக்க ஆஜா்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிக்க ஆா்.எஸ்.பாரதி, மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

தினமணி செய்திச் சேவை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிக்க திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தாா். மேலும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து, ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சாட்சி விசாரணைக்காக உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தாா். அதன்படி ஆா்.எஸ்.பாரதி சாட்சியம் அளிப்பதற்காக அந்த நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 8-ஆம் தேதிக்கு மாஸ்டா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து! மாற்றி யோசித்த பாஜக, ரூ.6088 கோடி வசூலித்து சாதனை!

மெரினாவில் இரவுநேரக் காப்பகம்! உதயநிதி திறந்துவைத்தார்!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT