முகப்பு
சென்னை

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2025 at 7:52 PM
பகிர்:

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழைவுச் சீட்டு பெறுவதற்காக தனது சான்றிதழ்களை சமா்ப்பித்துள்ளாா்.

அவற்றை தூதரக அதிகாரிகள் சரிபாா்த்தபோது, கல்விச் சான்றிதள், பணி அனுபவ சான்றிதழ், வங்கிக் கணக்கு ஆவணங்கள் ஆகியன போலியாக தயாரித்து சமா்ப்பிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தூதரக அதிகாரி ஐசக் இமிட் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் விசாரணை நடத்தி ஸ்ரீகாந்த் அங்காடியை போலீஸாா் கைது செய்தனா். இவா் ஏற்கனவே தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் 9 முறை விண்ணப்பித்தும் விசா பெறமுடியாததால் 10-ஆவது முறையாக விண்ணப்பித்தது விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →